August 16, 2014

புலிப்பார்வை இசை வெளியீடு விழாவை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது தாக்குதல்!

சென்னை சத்தியம் திரையரங்கில் “புலிப்பார்வை” திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது
திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் “புலிப்பார்வை” திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார்.
அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான போது மாணவர்கள் அரங்கத்திலிருந்தவாறே புலிப்பார்வைக்கு எதிரான கோசங்களை எழுப்பியதோடு, திரைப்படம் குறித்த சந்தேகக் கேள்விகளை எழுப்பி தங்களது ஜனநாயகவழியில எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அப்போது அரசியல் கட்சியின் பிரமுகர்களின் அடியாட்கள் மாணவர்கள் மீது கம்பிகள், பொல்லுகள் கொண்டு கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். ஒரு திரையரங்கிற்குள் எவ்வாறு இப்பொருட்கள் உள்ளே எடுத்து வரப்பட்டன என்ற சந்தேகத்துடன், தாக்குதல் நடத்துவற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே கட்சிகளினால் தயார் செய்யப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை மீட்டுக்கொண்டு அடியாட்களைக் கைது செய்யாது காயங்களுக்க உள்ளான மாணவர்களைக் கைது செய்து சிறையில் தடுத்து வைத்திருப்பது நீதிக்குப் புறம்பான செயற்பாடு என பலரும் விமர்சிக்கின்றனர்.
நிகழ்வில் கலந்துகொண்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் ஆகியோர் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment