August 23, 2014

அநுராதபுரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு ஆவன செய்க! அனந்தி வடமாகாணசபையில் கோரிக்கை!

அநுராதபுரம் சிறையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகள் மூவரின் விடுதலை குறித்து வடக்கு
மாகாண சபை விரைந்து செயற்பட வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின்  14ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டட தொகுதியில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பினில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தவறினால் அவர்களை காப்பாற்ற முடியாத துன்பநிலை ஏற்படலாமெனவும் அவர் எச்சரித்திருந்தார்.

No comments:

Post a Comment