May 28, 2014

பெண்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேஸ்புக் பக்கம்! மேனகா காந்தி அதிரடி

விலங்குகள் நல ஆர்வலராகவும் சமூக நல ஆர்வலராகவும் அறியப்பட்டவர் மேனகா காந்தி.

மோடியின் அமைச்சரரைவயில் அங்கம் வகிக்கும் இவர் தற்போது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்து வருகிறார்.
தனது பணிகளை பற்றி பேசிய மேனகா கூறுகையில்,
இன்றைய நாட்களில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதும் பல்வேறு தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதனை தடுக்கும் வகையில் எனது தலைமையிலான துறையால் புகார்களை பெறுவதற்கு என்று தனியாக புதிய முகநூல் பக்கம் ஒன்று திறக்கப்படும்.
மெலும் அவர்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கவும் மேலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வழிவகை செய்யும்” என்றும் தெரிவித்தார்.
ManekaGandhi

No comments:

Post a Comment