August 17, 2016

அமெரிக்க மருத்துவர்கள் மூலம் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ சோதனை?

யாழ்ப்பாணம் வந்துள்ள அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம், முன்னாள் போராளிகளை பரிசோதனைக்கு உட்டபடுத்தலாம் என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த கோரிக்கையை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்றுக் கொண்டுள்ளார்.


 
வடமாகாணசபையின் 58ஆம் அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற போது விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமை தொடர்பாக பன்னாட்டு மருத்துவர்களை கேட்கும் நாம் தற்போது யாழ்.குடாநாட்டில் மருத்துவ முகாம்களை நடத்த வந்திருக்கும் அமெரிக்க விமான படை மருத்துவர்கள் ஊடாக முன்னாள் போராளிகளை பரிசோதித்தால் என்ன? என மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கேட்டார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மருத்துவ உதவி பொருட்களுடன் அமெரிக்க விமான படையினருடன் யாழ்.வந்தபோது அமெரிக்கா தூதுவர் அத்துல் கேஷாப்பிடம் இந்த விடயத்தை தாம் கேட்டதாகவும் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் முன்னாள் போராளிகள் சிலரை தெரிவு செய்தால் பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என கூறினார்.

No comments:

Post a Comment