July 8, 2016

நெடுங்கேணி மத்திய பேரூந்து நிலையத்திற்கு இடையிலுள்ள குழாய்க் கிணறு கவனிப்பற்ற நிலையில்!

நெடுங்கேணி பொதுவிளையாட்டு மைதானத்திற்கு மத்திய பேரூந்து நிலையத்திற்கு இடையிலுள்ள  குழாய்க் கிணறு கவனிப்பாராற்று  காணப்படுகின்றது.


பொதுவிளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள குழாய்க்கிணறு நெடுங்கேணி  பிரதேசசபையின் பாராமரிப்பிலுள்ள போதிலும் இதனை உரிய  முறையில் கவனிக்கப்படாத காரணத்தினால் பற்றைகள் மூடி குழாய்கிணறு இருப்பதேதெரியாதஅளவுக்குபற்றை மூடிக் காணப்படுகின்றது.

இதனால் குழாய்க்கிணற்றில் புதிதாக நீர் எடுக்க வருபவர்களுக்கு இருக்குமிடம் தெரியாத அளவுக்கு  பற்றை மூடிக்காணப்படுகின்றது. அந்தவகையில் நெடுங்கேணிபிரதேசசபைக்கு வீதித் தொழிலாளிகள் சுகாதாரத் தொழிலாளிகள் சுத்தப்படுத்தும் தொழிலாளிகள் வாகனசாராதிகள் உரியமுறையில் வெற்றிடங்களுக்கான ஆளனிகள் இருந்தபோதிலும் உரியமுறையில் பிரதேசசெயலாளரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுசுத்தம் செய்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment