July 5, 2016

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!

புங்குடுதீவு வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வித்தியா கொலையாளிகள் சுவிஸ் குமார், உசாந்தன் ஆகியேரின் தாயார்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று செவ்வாய் கிழமை 5 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபட்டது.

இவ் விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment