June 30, 2016

இம்மானுவேல் ‘அடி’களார் மங்கள சமரவீரவிடம் மண்டியிட்டார்!

சிங்களவனைக் கல்லால் அடிக்கக் கூடாது, துவக்கால் சுட வேண்டும்’ என்று ஒரு காலத்தில் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடையே முழங்கிய இம்மானுவேல் அடிகளார், ஜெனவாவில் சிங்கள வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் மண்டியிட்டுள்ளார்.இன்று மாலை ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கட்டிடத் தொகுதியில் மங்கள சமரவீரவுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும், அவரது சகாக்களும் சுமுகமாக உரையாடிக் கொண்டதோடு, பின்னர் அங்குள்ள சலஸ் (Salles) என்ற சந்திப்புக் கூடங்களின் தொகுதியில் உள்ள மூடப்பட்ட அறை ஒன்றில் இரகசிய கூட்டம் ஒன்றையும் மேற்கொண்டுள்ளனர்.

இவை அனைத்தும் அங்கு நின்ற புலனாய்வுச் ஊடகர் ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளன.அத்தோடு இரகசிய கூட்டம் நடைபெறும் அறையும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு தை மாதம் யேர்மனி டுசுல்டோர்வ் நகரில் நடைபெற்ற தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கான பரப்புரை மூலோபாயக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுது ‘சிங்களவனுக்குக் கல்லால் அடிக்கக் கூடாது, துவக்கால் சுட வேண்டும்’ என்று முழங்கிய இம்மானுவேல் அடிகளார், சிங்களத்திடம் மண்டியிடுவதில் பெயர் போன அடித்தொண்டு அரசியல் நாயகர்களின் வரிசையில் தற்பொழுது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






படங்கள் :- சங்கதி 24

No comments:

Post a Comment