June 29, 2016

யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கண்காட்சி!

யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் எற்பாட்டில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் “பனங்காட்டில் புத்திக்கூர்மை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இராணுவத்தினரின் புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், புதிய கண்டுபிடிப்புக்களைப் பார்வையிட ஆர்வமுள்ளவர்களை இந்தக் கண்காட்சிக்கு வருமாறு இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஷேஸ் சேனநாயக்க, மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் மற்றும் வடக்கு மாகாண சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment