September 17, 2015

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம்! (படங்கள் இணைப்பு)

வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனத்தின் இறுதி நாள் தீர்த்தோற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 08ம் திகதி செவ்வாய்கிழமை கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகி பத்து நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வியாழக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றுள்ளது.
மஹோற்சவ பிரதம குரு பிரம்மஸ்ரீ.சுந்தர செந்தில் ராஜக் குருக்கள் தலைமையில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்று பிள்ளையார் தீர்த்தமாடுவதற்காக கல்குடா வீதி வழியாக பாசிக்குடா வங்கக் கடலுக்கு சென்று தீர்த்தமாடினார்.
இதன்போது பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உயிர் நீர்;த்தவர்களின் ஆத்மாக்காக விரதம் இருந்து தங்களுடைய நேர்த்தியை நிறைவு செய்தனர்.
உற்சவம் நிறைவுற்றதும் ஆலயத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

No comments:

Post a Comment