May 20, 2015

வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையை விசாரணைக்கு வருமாறு சி.ஐ.டி அழைப்பு!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுப்பிரமணியம் பசுபதிப்பிள்ளையை எதிர்வரும் 25ம் திகதி கொழும்பு 2ம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பான கடிதத்தை இன்று அவரது வீட்டிற்கு சென்ற குற்றப்
புலனாய்வுப் பிரிவினர்  வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே இவர் யோசேப் முகாமில் 2013ல் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் விபத்து காரணமாக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையிலும், இவருக்கு தொலைபேசி மூலம் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.
எனினும், சிகிச்சை காரணமாக இவர் விசாரணைக்கு சென்றிருக்கவில்லை.
இந்தநிலையில் நாட்டில் சுமுகமான  சூழ்நிலை, நல்லாட்சி, இன நல்லிணக்கம் என்று சொல்லப்படுகின்ற காலத்தில் வடக்கில் ஒரு மக்கள் பிரதிநிதி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment