May 6, 2015

மனைவியின் தங்கை மீது ஆசை - காதலைக் குழப்ப முயன்ற காமூகன் - யாழில் சம்பவம்!


யாழ் நாவலர் வீதிப் பகுதியில் யாழ் பல்கலைக்கழ மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை இறந்துவிட்டார்.

அத்துடன் தாயாரும் கடும் சுகவீனமடைந்து படுக்கையில் உள்ளார். இதனால் குறித்த யுவதி தனது திருமணமான அக்காவுடன் தாயையும் வைத்துக் கொண்டு வசித்து வந்துள்ளார்.
அக்கா திருமணம் முடித்து உரும்பிராய் பகுதியில் வசித்துள்ளார். பின்னர் தாயாருக்கு சுகவீனமாகிய நிலையில் தாயாரையும் கவனிப்பதற்காகவும் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலையில் படிக்க வைப்பதற்காகவும் நாவலர் வீதியிலுள்ள வீட்டுக்கு வந்து வசித்துள்ளார். அக்காவின் கணவனான யுவதியின் அத்தான் கொழும்பு வர்த்தகம் செய்வதாகத் தெரியவருகின்றது. அத்துடன் நவீன கார் ஒன்றையும் அவர் வைத்துள்ளார்.

அத்தானுக்கு யுவதியின் மீது தொடர்ச்சியான மோகம் இருந்துள்ளது. யுவதி க.பொ.த (சா.த), உயர்தரம் கற்று முடித்த போது பின் 2012 ம் ஆண்டு அவர் பயங்கரத் திட்டம் போட்டு அவளை அடைய முற்பட்டுள்ளார்.

அக்காவையும் பிள்ளைகள் இரண்டையும் கொழும்பு கொண்டு சென்று அங்குள்ள வீட்டில் தங்க வைத்து விட்டு அவசர வேலை என்று தெரிவித்து யாழ்ப்பாணம் வந்துள்ளார் அத்தான்.
அதன் பின்னர் அவர் குறித்த யுவதியை கொழும்பு வா! அக்காவுடன் சேர்ந்து இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம். நாங்கள் ஏராளமான இடங்கள் பார்க்கப் போகின்றோம் எனத் தெரிவித்து அழைத்துள்ளார். அதே நேரம் கொழும்பில் நின்ற தனது யுவதி கொழும்பு வந்து இடத்தைப் பார்க்க ஆசைப்படுவதாக தெரிவித்து யுவதியை அங்கு கொண்டு வர சம்மதமும் பெற்றுள்ளார்.

தாயை தாயின் சகோதரியின் பொறுப்பில் விட்டுவிட்டு யுவதியும் அத்தானுடன் கொழும்பில் காரில் சென்றுள்ளார். இரவில் செல்வது போக்குவரத்துக்கு நல்லது எனத் தெரிவித்து யுவதியை தனது காரின் முன் பகுதியில் வைத்து சென்றுள்ளார்.  இரவு 8 மணியளவில் முறுகண்டி கழிந்த பின்னர் காரை  நிறுத்தியுள்ளார். அதே நேரம் தனது கைத்தொலைபேசியை யுவதியிடம் கொடுத்து பார்க்க சொல்லியதுடன் ஆபாசமாகக் கதைத்து கொண்டிருந்துள்ளார்.

குறித்த கைத் தொலைபேசியில் ஆபாசப் படங்கள் இருப்பதைக் கண்ட யுவதி உடனடியாக அதை அணைத்து காரின் முன்பக்கம் வைத்துவிட்டார். காரை நிறுத்திய பின்னர் யுவதியுடன் தவறான நடக்க முற்பட்டவுடன் யுவதி கடும் கோபமடைந்து வெளியே இறங்கி ஓட தொடங்கியவுடன் அவளை நிறுத்தி தான் இனி தப்புவிடமாட்டேன் என கூறி மீண்டும் கொழும்பு கொண்டு சென்றுள்ளார்.

அதன் பின்னர் அத்தானுடன் யுவதி கடும் போக்கைக் கடைப்பிடித்து வந்துள்ளார்.
இதன் பின்னர் யுவதி வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகம் பார்க்கும் இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். இதனை அறிந்த அத்தான் பெரும் வில்லத்தனங்கள் செய்ததாகத் தெரியவருகின்றது. தனது மனைவிக்கு குறித்த காதலனைப் பற்றித் தவறாகத் தெரிவித்ததுடன் மனைவியையும் தாக்கியுள்ளார். அத்துடன் வெளிநாட்டில் இருக்கும் அவளது அண்ணனுக்கும் சகோதரிக்கும் தவறான தகவல்கள் எல்லாம் கூறியுள்ளார்.

குறித்த இளைஞன் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவன் என்ற காரணத்தாலும் அத்தானின் முறைப்பாடு காரணத்தாலும் அவளின் காதலுக்கு உறவினர்கள் சம்மதிக்கவில்லை. யுவதி தனது அத்தானைப் பற்றி உறவினர்களுக்கு தவறாகக் கூறிய போதும் அவர்கள் அதை நம்பவில்லை எனத் தெரியவருகின்றது. இதனால் விரக்தியுற்ற யுவதி கடிதம் எழுதிவிட்டு வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் துாக்கில்  தொங்க முற்பட்ட போது அதைப் பார்வையிட்ட அயலவர் ஒருவர் குக்குரல் இட்டு ஏனையவர்களுடன் சேர்ந்து யுவதியைக் காப்பாற்றியுள்ளார்.

இச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட காதலன் தனது நண்பர்களுடன் வந்து யுவதியின் வீட்டை முற்றுகையிட்டு யுவதியை மீட்டுச் சென்றுள்ளார். அத்துடன் யுவதியின் அத்தானையும் தாக்க முற்பட்ட போது அவர் மதில் பாய்ந்து தப்பிச் சென்றதாகவும் காதலனின் நண்பர்கள்  தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment