May 4, 2015

கல்முனையில் தமிழ் யுவதிகளை பாலியல் தொந்தரவிற்குள்ளாக்கும் காவாலிகள்!

கல்­முனையின் தமிழ்ப்­பி­ரிவு பிர­தேச செய­ல­கப்­பகுதிகளில் உள்ள கிரா­மங்­களில் தறிகெட்டு அலையும் வாலிபர்களின் தொல்லை தாங்க மடியாதுள்ளதாக யுவதிகள் குற்றம் சுமத்துகின்றனர். தனி­மையில் செல்லும்
இளம் பெண்­க­ளிடம் பாலியல் சேஷ்டை­களில் ஈடு­படும் காவாலிகளால் வயது வேறுபாடின்றி பெண்கள் அசௌகரியப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கல்­முனை, பாண்­டி­ருப்பு, பெரி­ய­நீ­லா­வணை, சேனைக்­கு­டி­யி­ருப்பு, நற்­பிட்­டி­முனை, மணல்­சேனை, ஆகிய கிரா­மங்­களிலேயே இந்த காவாலிகள் அட்டகாசம் புரிகின்றார்கள்.

கிரா­மங்­களின் உள்ளூர் வீதி­களில் பய­னிக்கும் பெண்­களின் பின்னால் சைக்கிள், மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் செல்லும் இந்த காவாலிக்கூட்டம், ஆட்கள் இல்லாத பகுதிகளில் வைத்து யுவதிகளை தகா­த­வார்த்­தை­களால் பேசி பாலியல் தொந்­த­ர­விற்­குள்­ளாக்கி விட்டு தப்­பிச்­செல்­கின்­றனர்.

இதே­வேளை அதி­காலை, காலை, மாலை வேளை­களில் தனியார் வகுப்­பு­க­ளுக்கு செல்லும் மாண­வி­களின் பின்னால் செல்லும் சிலர் மாண­வி­க­ளிடம் சேஷ்டை விடு­வ­தா­கவும், இதனால் தமது பிள்­ளைகள் பாட­சாலை, தனியார் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு செல்­வதில் அச்­சப்­ப­டு­வ­தா­கவும் பெற்­றோர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

இது தவிர பாட­சா­லைகள் ஆரம்­பிக்கும் நேரம், முடி­வ­டையும் நேரங்­களில் வீதி­களில் தேவை­யற்ற விதத்தில் கூடி­நிற்கும் கும்­பல்கள் மாண­வி­க­ளிடம் சேஷ்­டை­களில் ஈடு­பட்டும் வரு­கின்­றனர். அத்­துடன் பெண்­க­ளிடம் தங்­க­ந­கைகள், பணம் என்­ப­ன­வற்­றையும் பறித்து செல்­கின்­றனர்.

எனவே இவ்­வா­றான செயற்­பா­டு­களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக கல்முனை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments:

Post a Comment