May 4, 2015

காணாமல்போன மகன் உயிரோடு இருக்கிறானா? – ஊசலாடும் பெற்றோா்!

யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பல்வேறு கோணத்தில் சுவடுகள் நம்மிடம் காணப்படுகின்றன. உறவுகளை உயிரோடு தொலைத்துவிட்டு இன்றும் அவர்களை தேடுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

காணாமல் போன தங்கள் பிள்ளைகளை தேடி அலைந்து கொண்டு இருப்பது போன்று பல ஆயிரக்கணக்கானவர்களில் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் வசித்து வரும் ஜெயசிங்கமும் ஒருவராவார்.
தனது பிள்ளை உயிரோடு இருக்கிறானா? இல்லையா என்று கூட தெரியாமல் இந்த தந்தை போராடிக் கொண்டிருக்கின்றார்.
கடந்த 2009 ஆண்டு ஜெயசிங்கத்தின் மகன் ஜெகதீஸ் வெளிநாடு செல்வதற்கு கொழும்பில் தங்கியிருந்த தருணத்தில் காணாமல் போயுள்ளார்.
Unbenannt Unbenannt2 Unbenannt3 Unbenannt4 Unbenannt5 Unbenannt6

No comments:

Post a Comment