August 18, 2014

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு மக்கள் முன்வந்து சாட்சியமளிக்க வேண்டும்! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள்!

போர்க்குற்ற விசாரணைக்கு மக்கள் முன்வந்து சாட்சியங்களை வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவரது கொழும்பு இல்லத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்
தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,
சாட்சியங்களை கணனி ஸ்கைப் ஊடாக வழங்க முடியும். இதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம் முழு ஒத்துழைப்பை வழங்கவுள்ளோம். தமிழ் மக்களுடைய முழு ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.
விசாரணைக்கு ஒவ்வொருவரும் தமது சாட்சியங்களை வழங்குவதன் மூலம் இறந்த எமது உறவுகளுக்கு நாம் செய்யக்கூடிய கடமையாகும். புலம்பெயர் அமைப்புக்களும் தமிழர்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
விசாரணைக்கு முழுமையான சாட்சியங்களை வழங்குவதற்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். அப்பொழுது தான் விசாரணைக்கு முழுமையான சாட்சியங்கள் பயனுள்ளதாக அமையும்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுடைய சாட்சியம் முக்கியமாக இருக்குமோ என்று முடிவு செய்யக்கூடாது. அனைவரும் தமது சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு இனம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை காட்டுவது என்றால் எல்லோரின் சாட்சியங்கள் மூலம் தான் அது முடிகிறது. மக்களின் முழு ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.


இந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment