August 24, 2014

லைக்கா – சிறீலங்கா உறவு: தமிழ் மக்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றதா?

பிரித்தானியா அரச வட்டாரம் மற்றும் அரச குடும்பத்தவர்களின் தொலைபேசி அழைப்புக்களை ஒட்டுக்கேட்டது தொடர்பில் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த சன் என்ற பத்திரிiகின் அதிகாரிகள் பலர் விசாரணையில் சிக்கியதுடன், சிலருக்கு
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது ஜெர்மனிய அதிபர் அஞ்சலா மேர்க்கல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் அமெரிக்க உளவுத்துறையினர் ஒட்டுக்கேட்ட சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் பல கருத்துவேறுபாடுகளைத் தோற்றுவித்திருந்தது.
இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை முக்கிய தளமாகக்கொண்டியங்கிவந்த லைக்கா செல்லிடத்தொலைபேசிக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையில் உள்ள நெருக்கமான தொடர்புகள் வெளிவந்துள்ளதுடன் அது பல தரப்பினரையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதாவது தமது தொலைதொடர்பு உரையாடல்களும் சிறீலங்கா அரசினால் ஒட்டுக்கேட்கப்பட்டிருக்குமா? ஆதனை சிறீலங்கா அரசு பதிவு செய்திருக்குமா? மலோசியா உட்பட பல நாடுகளில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் நாடுகடந்த அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்த உரையாடல்களின் ஒட்டுக்கேட்டல்களே தகவல்களை வழங்கியிருக்குமா என்ற அச்சம் உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் தமிழகத்தில் உள்ள பல தமிழ் அமைப்புக்களும் இந்த வலையமைப்பையே பயன்படுத்தியும், அவர்களின் பணத்தில் பல நிகழ்வுகளையும் நடத்திவந்ததனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் சிறீலங்கா அரசிற்கு உடனடியாகவே தெரியப்படுத்தியிருக்கலாம் என்ற கருத்துக்களையும் மறுப்பதற்கில்லை.
இதனிடையே லைக்கா – சிறீலங்கா உறவு தொடர்பில் தாயகத்தில் இருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற முக்கிய தகவல்களை ஈழம்ஈநியூஸ் தனது வாசகர்களுக்கு இங்கு தருகின்றது.

லைக்கா பற்றி உலக அளவில் போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும்வேளையில் ஈழத்திலும் தென்னிலங்கையிலும் லைக்கா தனது கிளைகளை நிறுவி வருகிறது. தமிழினப்படுகொலைக்கு பின்னா்மோசமான சட்டங்களை போட்டு தமிழினத்தை அடக்கி வரும் சிங்களம் தமிழகத்தின் குரலை கண்டு மிரண்டது. பின்னா் பல முயற்சிகளை மேற்கொண்டு திரையுலகப்பிரமுகர்களை கையாண்டு தமிழ்மக்களின் மன நிலைகளை மாற்றுவதற்காக படாத பாடு பட்டது. ஆனால் தமிழகத்தின் திரையுலகம் அசைந்து கொடுக்கவில்லை. ஆனால் தற்போது லைக்காவின் உதவியால் சீமான் போன்றவா்களை இவா்கள் கையாள தொடங்கி விட்டனா்.சிங்களவா் மத்தியில் முன்னைய சீமானின் கருத்துக்கள் சென்றடைந்திருந்தன. சீமானில் அவர்கள் கோபங்கொண்டிருந்தனா் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இப்போது நேயம் பாராட்டுவார்கள்)
தெரிந்தோ தெரியாமலே பல தமிழா்கள் விலைபோயுள்ளார்கள் வடகிழக்கில் பல கிளைகள் நிறுவப்பட்டுள்ளன .இனியாவது அவா்கள் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.
இலங்கையில் லைக்கா அமைந்துள்ள முகவரிகள்:
லைக்கா குழுமங்களின் குழு
E-6, கீழ் கிழக்கு கோபுரம்
உலக வணிக மையம்
கொழும்பு – 01
மேலாளர்: சுப்பிரமணியம் அரவிந்தன்
(சுபாஸ்கரனின் நெருங்கிய உறவினர்)
உதவியாளர்: ஜே. ரவீந்திரன்
(இருவரும் முந்நாள் மற்றும் நேரெதிர் ஊழியர்கள்)
இந்த முகவரியில் இயங்கும் லைக்காவின் கட்டிடம் கோத்தபய ராஜபக்ஸெக்கு உரியது. லைக்கா இதனை இலவசமாகப் பெற்றுள்ளது.
வட இலங்கையில் லைக்காவுக்கு எட்டு கிளை அலுவலகங்கள் உள்ளன.
1. யாழ்ப்பாணம்: 4-வது குறுக்குத் தெரு
2. வவுனியா: கோவில் வீதி குருமங்காடு
3. கிளிநொச்சி: திரு நகர், உருத்திரப்பரம் வீதி
4. மன்னார்: புனித செபஸ்தியான் தெரு
5. முல்லைத்தீவு: முள்ளியவளை
6.திருகோணமலை: பெருமாள் தெரு
7. மட்டக்களப்பு: ஏரி வீதி
8. அக்கரைப் பத்து: பொத்துவில் வீதி
ஒருங்கிணைப்பாளர்கள்:
1. யாழ்ப்பாணம்: கே.சிவநீதன்
2. வவுனியா: எம்.மரியநேசன்
3. கிளிநொச்சி: பெனடிக்ட் அலிஸ்டோர்
4. மன்னார்: எஸ். கீதீஸ்வரராஜ்
5. முல்லைத்தீவு: எம்.குணசேகரன்
6. திரிகோணமலை: ஏ.தேவனேசன்
7. மட்டக்களப்பு: ஜி.சங்கீத்
8. அக்கரைப்பட்டு: எஸ்.பி.அகிலன்
அனுராதபுரத்திலும், பொலனறுவையிலும், புத்தளத்திலும்,கம்பகாவிலும், மொனரகலாவிலும் புதிய அலுவலகங்களைத் திறக்க இருக்கின்றனர்.
லைக்காவின் சர்வதேச வெளியீட்டு உறவு அலுவலர்:
கே. கருணாகரன், முந்நாள் வீரகேசரி மற்றும் பி.பி.சி. ஊடகவியலாலர்
தலைவர்: அல்லிராஜா சுபாஸ்கரன்
துணைத்தலைவர்: பிரேம் பெரியசாமி
லைக்காவின் ஞானம்அறக்கட்டளை புரவலர்: ஞானாம்பிகை அல்லிராஜா (சுபாஸ்கரனின் தாயார்).
நிதி கட்டுப்பாட்டாளர்: ராஜ்சங்கர், (முந்நாள் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர், சுபாஸ்கரனின் நெருங்கிய உறவினர்).
கடந்த ஜூன் மாதம், சுபாஸ்கரனும் அவரது 16 உறவினர்களும் அவர்களது புதிய அலுவலக திறப்பு விழாவிற்காக சிறீலங்கா வந்தனர். அவர்களுக்கு 27 இருக்கைகள் உள்ள உலங்கு வானூர்தி ஒன்றை கோத்தபய ஏற்பாடு செய்து கொடுத்தான். ஒரு நாள் சென்னையில் பொருட்கள் வாங்க போவதற்காக இந்த உலங்கு வானூர்தியில் சென்றனர். சென்னையில் ஒரு ராணுவ விமான தளத்தில் இந்த வானூர்தி இறங்கியது.
பொது பல சேனாவிற்கு சுபாஸ்கரன் ஏராளமான பணம் கொடுத்துள்ளார். அதனால் அவர்கள் லைக்காவைப் பற்றி ஏதும் பேசுவதில்லை. பொது பலசேனா காலியில் தங்கள் தலைமையகத்தை அமைத்த போது சுபாஸ்கரனால் இந்தப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு அலுவலக அரவிந்தனும், ரவீந்திரனும் ஏராளமான பணம் கையாடுகின்றனர். அண்மையில் அவர்கள் 2000 சைக்கிள்களும், 2000 தையல் எந்திரங்களும், 500 சக்கர நாற்காலிகளும் வாங்கி இருக்கின்றனர் (ஞானம் ஃபவுண்டேஷனுக்காக). அரவிந்தனும், ரவீந்திரனும் இதற்காக 45இலட்சம் சிறிலங்கா ரூபாய்களைப் பெற்றிருக்கின்றனர். கொழும்பு அலுவலக ஊழியர்களுக்கு அவர்கள் ஒழுங்காக சம்பளம் கொடுப்பது கிடையாது என அலுவலக வட்டாரங்கள் தெரிக்கின்றன..
கல்பிட்டியில் லைக்கா குழுமத்தினர் 1000 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். அங்குள்ள எல்லா மீனவர் கிராமங்களையும் அழித்துவிட்டு புதிதாக ஒரு சொகுசு விடுதி ஒன்றை கட்டி வருகின்றனர்.
லைக்காவின் லண்டன் நிதி கட்டுப்பாட்டாளர் ராஜ்சங்கர் (முந்நாள் சக்தி தொலைக்காட்சி செய்தியாளர், சுபாஸ்கரனின் நெருங்கிய உறவினர்). இப்போது அவர்தான் சிறிலங்காவின் கொலைகாரச் சகோதரர்கள் மகிந்த, மற்றும்கோத்தபயவுடன் நிதித் தொடர்புகளை பேணி வருகிறவர்கள்.
உவா மாகாணத் தேர்தலுக்கு 1000 மில்லியன் பணம் வழங்குவதாக லைக்கா உறுதி சொல்லி இருந்தது. இந்தப் பேரம் ராஜ் சங்கரால் ஒழுங்கு படுத்தப் பட்டது. ராஜ் ஷங்கர் சக்தி தொலைக் கட்சியில் வேலையில் இருந்தவா். பிறகு வேறொரு ஊடகத்திலும், அதன்பின் லண்டனில் வெக்டோனிலும் போய் வேலைக்குச்சேர்ந்தவர்.
இப்போது பெரிய நகைச் சுவை என்னவென்றால் வடக்கு முதலமைச்ச்சர் சி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இவர்கள் எல்லோரும் மேற்கண்ட லைக்கா ஆசாமிகளை அங்கீகரித்துள்ளனர். இதுவொன்றும் புதுமையல்ல ஏனெனில் அது அவா்களின் வழமை செயற்பாடுகள். ஆனால் எப்படி இவா்களால் தமிழ் மக்களை வழி நடத்த முடீயம் என்பது கேள்வி குறியே!
இப்போது சுபாஸ்கரன் சிறிலங்காவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. லைக்கா மொபைல்இணைப்பினை சிறிலங்காவில் தொடங்குவதற்காக இரு தரப்பினரும் இப்போது கைச் சாத்திடப் போகின்றனர்.
கொழும்புவில் அவர்களுக்கு ஞானம்அறக்கட்டளை, லைக்காஃப்ளை, லைக்காரிசார்ட், லைகா மொபைல் கிளைகள் உள்ளன.
கொழும்பு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு ஒரு குவளை தேநீர் கூட கொடுக்க விரும்பாதவா்கள் சமூக சேவை செய்வதாக காட்டிக்கொள்ளுவது. சிங்களத்தை வளைத்துபோட்டு கொள்ளை அடிப்பதற்கு. அதற்கு ஈடாக தமிழர்களின் இருப்பிற்கு வேட்டு வைத்து சிங்களத்திடம் காட்டி கொடுப்பு பணியினை மேற்கொண்டு தமது வணிகத்தை பொருக்குவதற்கு எனவே உண்மைகளை உணர்ந்து லைக்காவை அதன் வணிகத்தை சிதைக்க வேண்டியது எமது கடமை என்பதை தமிழா்கள் எங்கிருந்தாலும் மறக்க கூடாது என்பது மட்டும் திண்ணம்!

No comments:

Post a Comment