August 19, 2014

முள்ளிவாய்க்கால் பகுதியில் மீண்டும் வெடியா!!

முல்லைத்தீவு – வெள்ளா முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டினை துப்பரவு செய்து நெருப்பு வைத்தபோது அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்தமையினாலேயே வெள்ளா முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment