August 23, 2015

பருத்தித்துறை, கற்கோவளம் கடலில் மீன்பிடி வலையினில் இளைஞனின் சடலம்!(படங்கள் இணைப்பு)

வடமராட்சியின் பருத்தித்துறை, கற்கோவளம் கடலில் கரைவலை மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் வலையில் ஆணொருவரின் சடலமொன்று இன்று சிக்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றது. இது தொடர்பினில் பருத்தித்துறை பொலிஸாருக்கு மீனவர்கள் அறிவித்ததை அடுத்து, சடலத்தை அவர்கள் மீட்டு மந்திகை அரசினர் வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் எவையும் வெளியாகயிருக்கவில்லை.



No comments:

Post a Comment